பலாங்கொட பிரதேசத்தில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் பலி..!!

பலாங்கொட பிரதேசத்தில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். வளவ தோட்டம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது மரம் முறிந்து விழுந்தது. காயமடைந்த மேலுமொரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.